தைரியாமாக இருப்பதெற்க்கென்றே
நிர்பந்திக்கப்பட்டவள்…
அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு
அடிக்கடி போய்வர வேண்டியிருக்கும்…
கணவனின் நண்பர்கள்
அடிக்கடி பேசும்மளவு
பரிச்சயமிருக்கவேண்டும்…
மென்னையானவளாயிருத்தல்
அவ்வளவு உகந்ததல்ல
வன்முறைக்கும் கொஞ்சம்
பழகிக்கொள்ள வேண்டும்…
ஒருவேளை காதல்மணம்
புரிந்திருப்பாளாயின்
தற்போது ஏற்படும்
குற்றவுணர்ச்சிக்கும்
சுய இரக்கத்திற்கும்
பதில்தேடி அவ்வப்போது
கோவிலுக்கோ
தத்துவ புத்தகங்களிடமோ
மனநல மருத்துவரிடமோ
செல்ல வேண்டியிருக்கும்…
போராளிகள்
தம் மனைவியின் மனதை
புரிந்துகொள்ளவோ
பொருட்படுத்தவோ கூடாது…
அதையும் மீறி
அவளின் கண்ணீருக்கு
செவிமடுத்தால்
அவன் திரும்பி வரமுடியா
முழுமையான குடும்பஸ்தனாகிவிடும்
சமுக அபாயம் இருக்கிறது…
போராளியாய் இருப்பது
போராளிகளுக்கு எப்போதும்
எளிதாகவே இருக்கிறது…
போராளியின் மனைவியாய் இருப்பது
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
சமூகப் பார்வை அதிகமுள்ள பெண்ணுக்குக்கூட…
5 comments:
கவிதை அருமையா இருக்கு சபரி..இன்னும் எதிர்பார்க்கிறோம்..
கொஞ்சம் நீளம் அதிகம். அதனால் காரம் கம்மி. போட்டோ நல்ல குறியீடு. நல்ல நட்பு. வாழ்த்துக்கள்.
@jayaprakashvel: இதை காரசாரமா எழுத முடியுமான்னு தெரியல...
நல்ல நட்பு...
anna super .................
What I feel is its looks like too lengthy for me. So looks much diluted. My opinion.
Post a Comment