அன்பை
மிகசிறந்த
வன்முறை ஆயுதமாய்
லாவகமாய் பயன்படுத்துவதை
அவளிடம் மட்டுமே
பார்க்க முடியும்…
அவள் யாரையும்
தன் அன்பின் வலையில்
விழவைப்பதில்லை…
அவர்களாகவே சென்று
மாட்டிக்கொள்வதுதான்…
தெரியாமல் சிக்கியவர்களையும்
அவளே காப்பாற்றியும் விடுவாள்…
அதையும்மீறி அவளது
அன்பில் விழுவது
அவ்வளவு எளிதல்ல…
அவளின் அன்பில்
விழுந்தபின் அவனுக்கு
இரண்டே வாய்ப்புகள்
மட்டுமே இருந்தன…
ஒன்று
அவளது அன்பின் அடிமையாய்
ஒரு வாழ்வை வாழவேண்டும்…
அல்லது
அவளது அன்பிற்காக ஏங்கியே
ஒரு வாழ்வை துறக்க வேண்டும்…
அவள்
அன்பை வன்முறையாய்
அவன்மீது பிரயோகிக்கும்போது
எந்த ஒரு புறக்கணிப்பையும்
அவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…
தரப்படும் எந்த ஒரு தண்டனையையும்
அவன் கேள்வி கேட்காமல் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…
அவன் காதுகளால் கேட்கவே முடியாத
நம்பவே முடியாத அவளது பொய்களையும்
மறுக்காமல் நம்பத்தான் வேண்டும்…
எல்லோருக்கும்
அன்பின் மழைதான் அவள்…
அவனிடம் மட்டும்
அவள் காட்டும்
அன்பில் ராட்சசி…