Tuesday, January 25, 2011

சரியாகத்தான் நடக்கின்றன…


அனாதைகள் உருவாக்கப்படுகிறார்கள்
சமூகத்தின் கருவறைகளில்…

அகதிகள் துரத்தப்படுகிறார்கள்
பிறந்த மண்ணிலிருந்து…

பைத்தியங்கள் ஆக்கப்படுகிறார்கள்
வேசங்களை மறுப்பவர்கள்…

விலைமகள்கள் வாங்கப்படுகிறார்கள்
வீதிகளின் விளிம்புகளில்...

காதல் கைவிடப்படுகின்றன
திருமணத்திற்கு முன்போ அல்ல பிறகோ….

புரட்சியாளர்கள் சீர்திருத்தத்தைப் பற்றியும்
மததூதர்கள் நம்மிக்கையைப் பற்றியும்
ஓயாது பேசிக்கொண்டிருக்கின்றனர்…

புறக்கணிக்கப்பட்ட அன்பின் கல்லறைகளின்மேலே
ஆயிரமாயிரம் கோவில்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்…

கடவுள் இருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வுலகில்…

அன்பிற்க்கான சிறுமுயற்சியைத் தவிர
எல்லாம் இங்கு சரியாகத்தான் நடக்கின்றன…