அலுவல்களின்
சிந்தனையில்
சில கணப்பொழுதுகள்…
கனவில் நீ
வராத உறக்கத்தின்
சில கணப்பொழுதுகள்…
தியானத்தின்
ஆழ்ந்த
அமைதியில்
சில கணப்பொழுதுகள்…
நட்பின்
கேளிக்கை
உற்சாகத்தின்
சில கணப்பொழுதுகள்…
இப்படியாக
மிக அரிதாக
உன்னை
நினைக்காத
சில கணப்பொழுதுகள்
என் வாழ்தலில்
இருந்ததுண்டு…
அவையெல்லாம்
ஒன்றாக சேர்ந்துவந்து
என்னிடம் கெஞ்சுகின்றன…
உனதன்பில் நான் மகிழும்
கணப்பொழுதுகளாக
மறுவாழ்வு பெற
வேண்டுமென்று…
அந்த
வரத்தை
நீதானே
தரவேண்டும்…