எனது கவிதைகள்
உங்களை வருத்தப்படுத்துகிறது
நம்பிக்கையிழக்கச் செய்கிறது
பயமூட்டுகிறது
குற்றவுணர்வடையச் செய்கிறது
என்கிறீர்கள்…
தன்னைப்பற்றி எழுதியதாக
கோபப்படுகிறான்
நெருங்கிய நண்பனொருவன்…
அழகியல் உலகைப்பற்றி
உனக்கு எதுவுமே தெரியாதா?
என்று கேட்கிறாள்
தோழியொருவள்…
உங்களுக்கு போதையூட்டும்
ஒரேஒரு கவிதைகூட
என்னால் எழுதமுடியவில்லையே…