நிகழ்வுகளை கட்டுப்படுத்த இயலாதபோது
நம்பிக்கை தகர்கிறபோது
துரோகங்களை எதிர்கொள்ளும்போது
புறக்கணிப்பை தாங்கமுடியாதபோது
ஏற்க்கச் செய்தலில் தோற்கிறபோது
பொய்களை உணரும்போது
கோபங்கள் தோன்றுகின்றன
பிரியமானவர்களிடம்…
அன்பு சிறு புள்ளியில் தொடங்கி முழுமையாய் ஆக்கிரமிப்பதிப்போல்
கோபங்கள் விஸ்வரூபமாய் உருவாகி புள்ளியாய் சிறுக்கிறது
பிரியமானவர்களிடம்…
அடர்தல் அன்பின் இயல்பென்றால்
நீர்த்தல் கோபத்தின் இயல்பு
பிரியமானவர்களிடம்…
கோபங்கள் அன்பின் தலைகிழி
பிரியமானவர்களிடம்…