Friday, June 10, 2011

குழப்பங்கள் தெளியும்போது...




குழந்தைகளுக்கு நாம்தாம்
முத்தமிடக் கற்றுத் தந்தோம்…

குழந்தைகளுக்கு நாம்தாம்
கட்டித்தழுவக் கற்றுத் தந்தோம்…

குழந்தைகளுக்கு நாம்தாம்
கூடி விளையாடக் கற்றுத் தந்தோம்…

குழந்தைகளோ திடீரென வளர்ந்துவிடுகின்றனர்
நாமும் திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கின்றோம்…

குழம்புகின்றன
சற்றே வளர்ந்த குழந்தைகள்
என்னாகிவிட்டதென…

குழப்பங்கள் தெளியும்போது
குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பதில்லை…

No comments: