Sunday, February 27, 2011

பழைய தோழியிடம் சில எளிய வேண்டுகோள்கள்…


உரிமையல்லாதவனாயினும்
குறைந்தபட்ச உரிமையில் கேட்கிறேன்….

நாம் இருவருமே ஒரே ஊரில் இருந்தாலும்
நான் வரும் பாதைகளில் அதிகம் வராதே…
உன்னை தவிர்ப்பதென்பது
என்னையே நான் தண்டித்துக் கொள்(ல்)வதைப் போலுள்ளது….

நான் ஓய்வெடுக்கும் தோட்டத்தில்
நீயும் பொழுது போக்காதே…
நீ ஒருமுறை வந்துபோனபிறகு
பொதுவிடமான அது உன்னுடைய தோட்டமாகிவிட்டது…

கொஞ்ச நாட்கள் அன்பைப்பற்றி பொதுவாகக்கூட
எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்…
என்னைப்ற்றி சொல்வதுபோல்
தோற்ற மயக்கங்கள் ஏற்படுகின்றன…

மிக முக்கியமாக…

உனக்கு பதிலாக சமூக வலைதளங்களில் நீ பயன்படித்தும்
அந்த சிரிக்கும் குழந்தைப் படத்தை தயவுசெய்து மாற்றிவிடு
அது உன்னையும்விட அதிகம் என்னை தொந்தரவு செய்கிறது…

என் அளவில் நீயும்
உன் அளவில் நானும்
இதயத்தின் சொல்பேச்சுகூட கேட்கா
சிறு குழந்தைகள்தானே
உனக்கு தெரியாதா…



No comments: